ரம்யா யாரைப் பார்த்து வெட்கப்படுவார் தெரியுமா? – பிக்பாஸ்4

 

ரம்யா யாரைப் பார்த்து வெட்கப்படுவார் தெரியுமா? – பிக்பாஸ்4

’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று கமல் அடிக்கடி நிகழ்ச்சியில் சொல்வார். அதற்கு சரியான உதாரணம் நேற்றைய எப்பிசோட். எவிஷனலில் ஷிவானி, ஆஜித் இருக்கையில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டது ஆச்சர்யம் அல்ல. அதிர்ச்சியே. ஆரி, பாலா, அனிதா மூவரும் அர்ச்சனா அண்ட் கோவை காலி செய்துவிட்டார்கள் அல்லது பிக்பாஸ் குழுவின் மனநிலை இதுதான். விரிவாக கட்டுரையில் பார்ப்போம்.

கமல் வருகை

எட்டயபுரத்தில் பாரதியார் வீட்டுக்குச் சென்றதை உணர்வுபெருக்கோடு பகிர்ந்தபடி எண்ட்ரி கொடுத்தார். பார்வையாளர் போன் செய்து முதலில் கமலிடம் அரதபழசான கேள்வி கேட்டார். ‘ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தீங்க?’ இதற்கும் 100 முறைக்கு மேல் இந்த நிகழ்ச்சியிலேயே பதில் சொல்லிவிட்டார் கமல். 101 வது முறையாக அதற்குப் பதில் சொன்னார்.

பார்வையாளர் சோம்ஸிடமும் கமல் பல முறை கேட்ட கேள்வியைக் கேட்டார். அதுக்கும் அவர் மொக்கையாக இருந்தது. ஆடியன்ஸிடம் என்ன கேள்வி கேட்க போறீங்க என்று கேட்டு அனுப்ப மாட்டீங்களா?

ரம்யா யாரைப் பார்த்து வெட்கப்படுவார் தெரியுமா? – பிக்பாஸ்4

வார இறுதி எப்பிசோட்களில் என் பெயரைக் கூடச் சொல்வதில்லை என்று கன்ஃபெக்‌ஷன் ரூமில் கதறியிருந்தார் ஷிவானி. அதற்காக 11 முறை ஷிவானி.. ஷிவானி… எனச் சொல்லி சமாதானப்படுத்தினார். அடுத்து உடனே எவிக்‌ஷனிலிருந்து சேவ் என அறிவித்தார்.

புன்னகை மன்னி ரம்யா என்றொரு புது பட்டம் கொடுத்தார் கமல். ரம்யாவின் கேப்டன் ஷிப் பற்றி எல்லோரின் கருத்துகளையும் கேட்டார். அதில் பாலா, கேபி, ஆரி ஆகியோர் மட்டும் மாறுபட்ட கருத்துகளை முன் வைக்க ரம்யா லைட்டா அப்செட்டானார்.

நான்கு பேர் எவிக்‌ஷன் லிஸ்டில் இருக்க, ஸ்டோர் ரூமில் இருந்த நான்கு முட்டைகளை எடுத்து வரச் சொன்னார் கமல். அதில் முதல் இரண்டை உடைக்க அதில் ஏதுமில்லை. அடுத்த இரண்டு முட்டைகளில் அனிதா மற்றும் சோம்ஸின் பெயர்கள் இருந்தன. அவர்கள் இருவரும் சேவ் ஆனார்கள்.

ரம்யா யாரைப் பார்த்து வெட்கப்படுவார் தெரியுமா? – பிக்பாஸ்4

ஆஜித் மற்றும் அர்ச்சனா மட்டுமே எவிக்‌ஷன் லிஸ்ட்டில் இருக்க, போட்டி பரபரப்பானது. ஒரு பிரேக் விட்டு கமல் சென்றார். ‘நான்தான் வெளியே செல்வேன்’ என்று தனது சகாக்களிடம் சொல்லி, அடுத்து எப்படி ஆட வேண்டும் என டிப்ஸ் வழங்கிக்கொண்டிருந்தார்கள். ரியோ மற்றும் கேபி இருவரும் எப்படியாவது எவிக்‌ஷனிலிருந்து அர்ச்சனா தப்பி விடுவார் என்று எதிர்பார்த்தார்கள்.

கமல் திரும்ப வந்து அர்ச்சனா பெயரைப் படித்ததும் ரியோ, கேபி, சோம்ஸ் உடைந்தனர். ஆனால், அர்ச்சனா தனது பலமாக இருந்தார். சிரிப்போடு விடைக்கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

உண்டியலை உடைத்து அதில் இருந்த காசுகள் எல்லாம் கேபியிடம் கொடுத்து விட்டுச் சென்றார். ரியோ அண்ட் கோ (இனி அப்படித்தான்) அழுது தீர்த்தார்கள்.

ரம்யா யாரைப் பார்த்து வெட்கப்படுவார் தெரியுமா? – பிக்பாஸ்4

கமலைச் சந்திக்க வந்தார் அர்ச்சனா. வழக்கமான கேள்விகள். அதை விட வழக்கமான பதில்கள். வழக்கமான அகம் டிவிக்குள் சென்றது. வழக்கமான டிப்ஸ் தருவது.. வழக்கமான நம்பிக்கை வார்த்தைகள்… வழக்கமான விடைக்கொடுக்கல் என வழக்கமாக நடந்தன. வீட்டுக்குள் ஒவ்வொருவருக்கும் டிப்ஸ் தரும்போது அர்ச்சனாவைப் பார்த்து ரம்யா வெட்கப்பட்டார். அப்போது அர்ச்சனா “இந்தப் பொண்ணு ஆண்களைப் பார்த்துகூட வெட்கப்படுவது இல்லை… என்னைப் பார்த்துதான் வெட்கப்படுது” எனச் சொன்னார். அதுக்கு ரம்யாவிடமிருந்து வெட்கம்தான் பதில்.  அர்ச்சனாவுக்கான குறும்படம் அழகாக இருந்தது.

அர்ச்சனா இல்லாத பிக்பாஸ் நிச்சயமாக கேளிக்கை குறைவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கெனவே போரடித்து வரும் எப்பிசோட்டுகள் இனியும் என்னவாகப் போவது என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், கேபி, சோம்ஸ், ஷிவானி, ரம்யா, ரியோ ஐவருமே தானாக கண்டண்ட் கொடுப்பவர்கள் இல்லை. அனிதா, ஆரி, பாலா மூவரிடமிருந்துதான் கண்டண்ட் எடுத்தாக வேண்டும். இல்லையெனில், ரியோ – அனிதா சண்டையை மூட்டி விட வேண்டும்.

ரம்யா யாரைப் பார்த்து வெட்கப்படுவார் தெரியுமா? – பிக்பாஸ்4

எனக்கென்னவோ பிக்பாஸ் டீம் பாலாவுக்கு டைட்டில் கொடுக்க தயாராகி விட்டார் என்றே தோன்றுகிறது. அதனால்தான், அதற்கு போட்டியாக இருக்கும் நபர்களை வெளியே அனுப்புகிறார் போல. அப்படியெனில், பார்வையாளார்கள் வாக்குகள்? அது ஒரு பக்கம். இறுதி முடிவு பிக்பாஸ் டீம் கையில்தானே இருக்கிறது!

லவ் பெட்டில் பெரும்பான்மை காலியாகி விட்டது. இனிமேல் நேர்மையாக இருக்கும் என நினைப்பவர்கள் நிலையை நினைத்துதான் பரிதாபமாக இருக்கிறாது.