’பணம் எப்போதுமே திருப்தி தராது’ பிக்பாஸ் ஓவியாவின் தத்துவ ட்வீட்!

 

’பணம் எப்போதுமே திருப்தி தராது’ பிக்பாஸ் ஓவியாவின் தத்துவ ட்வீட்!

ஒரே நிகழ்ச்சியில் ஓஹோ என்று பெயர் வாங்கியவர் ஓவியா.  பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி அவரை புகழின் உச்சிக்குக் கொண்டுச் சென்றது. ஓவியா ஆர்மி என சோஷியல் மீடியாவே பரப்பரப்பாக ஓவியாவுக்கு வேலை செய்தது. பிக்பாஸ் எலினிமேஷனில் ஓவியா பெயர் இருந்தால் ஓவியா ஆர்மி இரவும் பகலுமாக அவருக்கு வாக்களித்து காப்பற்றியது.

’பணம் எப்போதுமே திருப்தி தராது’ பிக்பாஸ் ஓவியாவின் தத்துவ ட்வீட்!

அதற்கு முன் பல படங்களில் ஓவியா நடித்திருந்தாலும் அவரின் அடையாளமாக மாறியது பிக்பாஸ் நிகழ்ச்சியே. அவர் தன் இயல்புகளை மறைத்துக்கொள்ளாமல் இயல்பாக இருந்ததே அவருக்கான புகழைப் பெற்றுத்தந்தது என அப்போது சொல்லப்பட்டது. இன்றளவும் ஓவியா ஆர்மி ரிட்டர்மெண்டாக வில்லை என்பதைக் காட்டும் விதமாக, ஓவியாவின் ட்விட்டுகளில் கமெண்ட் செய்வதும், ரீட்விட் செய்வதும் என அதன் பணி தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

’பணம் எப்போதுமே திருப்தி தராது’ பிக்பாஸ் ஓவியாவின் தத்துவ ட்வீட்!

ஓவியா சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது ரசிகர்கள் பதிவிடும் ட்விட்டுகளுக்கு நன்றி தெரிவிப்பத்தோடு, சில கேள்விகளுக்குப் பதிலும் அளிப்பது வழக்கம்.

இன்று அவர் ஒரு தத்துவ ட்விட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ’உங்களிடம் இருக்கும் பணத்தைப் பற்றி பெருமைக்கொள்ளாதீர்கள்.. அது ஒருபோது உங்களுக்கு திருப்தியை தராது’ என்பதுதான் அந்த ட்விட்.

இதை ட்விட் செய்ததும் அவரது ரசிகர்கள், ‘அப்படி என்றால் எங்களுக்கு பணத்தை ட்ரான்ஸ்பர் செய்துவிடுங்கள்’ எனும் ரேஞ்சுக்கு கமெண்டுகளைப் பதிவிட்டு கலாய்த்து வருகிறார்கள்.