பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 

பிக் பாஸ் பிரபலம்  தர்ஷன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

பிக் பாஸ் பிரபலம் நடிகர் தர்ஷன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிக் பாஸ் பிரபலம்  தர்ஷன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் தர்ஷன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல், மோசடி, பெண்ணை மானபங்கப்படுத்துதல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிக் பாஸ் பிரபலம்  தர்ஷன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முன்னதாக நடிகையும் , மாடல் அழகியுமான சனம் ஷெட்டி கடந்த 2019 மே மாதம் தனக்கும் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்று கூறினார். மேலும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ஆண் நடிகர்களுடன் தொடர்புப்படுத்தி வேண்டாம் என்று கூறி விட்டதாகவும் தெரிவித்தார். உடல் ரீதியாக உறவு வைத்து கொண்டு , என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்றும் பரபரப்பு புகார் ஒன்றை பொதுவெளியில் கூறியது குறிப்பிடத்தக்கது.