இறுதிப்போட்டியில் நுழையப்போகும் முதல் நபர் யார்? – பரபரக்கும் பிக்பாஸ்4

 

இறுதிப்போட்டியில் நுழையப்போகும் முதல் நபர் யார்? – பரபரக்கும் பிக்பாஸ்4

’கிளைமேக்ஸில் படம் முடியுது’ எனும் காமெடி போல, பிக்பாஸ் இறுதி காலத்தில் கொஞ்சம் கொஞ்சம் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அதுவும் பலரும் எதிர்பார்த்த ஃபைனலில் நுழைய தகுதிப்போட்டி இந்த வாரத்தில் நடைபெற்று வருகிறது. எனவே, எப்போதும் போல் இல்லாது கூடுதலான சண்டைகள், பிரச்சனைகள், கொண்டாட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (வாய்ப்பில்ல ராஜா… என்று ஹவுஸ்மேட்ஸ் சொல்வது கேட்குதா?)

பிக்பாஸ்

காலையில் படையப்பா பாட்டைப் போட்டு எல்லோரையும் எழுப்பி விட்டார் பிக்பாஸ். ரம்யா பயங்கர அப்செட்டில் இருந்தார். அது கமலிடம் பேசும்போதும், எவிக்‌ஷனிலிருந்து காப்பாற்றப்பட்டபோது தெரிந்த ஒன்றுதான்.

காலையில் உற்சாகமாக ஆரி பாட்டுப்பாடி சோம்ஸை கலாய்த்துக்கொண்டிருந்தார். ஆரி மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது அரிய காட்சி என்பதால் பிக்கி வளைத்து வளைத்து காட்டினார். அங்கேதான் ஒரு ட்விஸ்ட். ஆரி வழக்கம்போல தன் வேலையை ஆரம்பித்தார். ‘ரியோ உங்களைப் பற்றி ரம்யா என்ன சொன்னாங்க தெரியுமா?’ என்று கொளுத்திப்போட்டார். அதன் பலன் உடனே தெரிந்தது. ரம்யாவிடம் விசாரணை செய்துகொண்டிருந்தார் ரியோ.

இறுதிப்போட்டியில் நுழையப்போகும் முதல் நபர் யார்? – பரபரக்கும் பிக்பாஸ்4

நான் என்ன செய்தேன்… அது எப்படி மாற்றி புரிந்தது என போன் டாஸ்க்கில் இருந்து ஆரம்பித்து ரம்யாவிடம் கேட்டார் ரியோ. அதற்கு ஒவ்வொன்றுக்கும் விரிவாகப் பதில் சொன்னார். உண்மையில் இருவரின் உரையாடல் நன்றாகவே இருந்தது. ஒருவரும் மற்றவர் மீது பழி போட வேண்டும் என்றோ, தாம் எஸ்கேப்பாக வேண்டும் என்றோ பேச வில்லை. இப்படியா நாம் சொல்லிக்கொடுத்தோம் என்று ஆரி இடையில் ஒரு தடவை வந்து செக் பண்ணிட்டு போனார். (எங்காவது இதையும் சொல்வார் என எதிர்பார்க்கலாம்)

பாலா 1000 வது தடவையாக ஆரியிடம் மன்னிப்புக் கேட்டார். அதன்பின், ‘கிச்சன் வேலை ஈஸி. கூட்டி பெருக்குறது கஷ்டம்னு கேபி இந்த வேலைக்கு வரமாட்டார்னு அன்னிக்கு சொன்னிங்க, ஆனா, நேற்று கிச்சன் வேலை கஷ்டம், கூட்டிப் பெருக்குறது ஈஸின்னு பாலா இந்த டீம்லேயே இருக்கார்னு சொல்றீங்க’னு கேட்டதும், பழைய கதையைச் சொல்லி வாயை அடைக்கப் பார்த்தார் ஆரி. வழக்கம்போல பாலா டென்ஷனாகி ஆரியை நல்லவராக்கி விட்டுச்சென்றார்.

இறுதிப்போட்டியில் நுழையப்போகும் முதல் நபர் யார்? – பரபரக்கும் பிக்பாஸ்4

பிக்பாஸ் 4 சீசனின் கடைசி நாமினேஷன் என அறிவித்தார் பிக்கி. ஓப்பன் நாமினேஷனில் முதல் அழைக்கப்பட்டவர் ரம்யா. அவர் இருந்த மனநிலைக்கு ஆரியைத்தான் சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கேபி, ஷிவானியைச் சொன்னார். ஷிவானி சொன்னது கேபி மற்றும் ரியோவை. ரியோ சொன்னது பாலா மற்றும் ஆரியை. ஆரி சொன்னது ரியோவை.
இப்படி மாற்றிமாற்றி நாமினேஷன் சொல்லிக்கொள்ள இறுதியாக பிக்பாஸ் இறுதிவாரம் என்பதால் எல்லோருமே நாமினேஷன் என்றார். கேப்டன் பொறுப்பு இருந்தும் ரியோவுக்கு எந்தப் பலனும் இல்லை.

இறுதிப்போட்டிக்குச் செல்லும் போட்டிகளை அறிவித்தார் பிக்கி. முதலில் நீர் நிரம்பிய பலூனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். கீழே ஆணி அடிக்கப்பட்ட பலகை இருக்கும். முதலில் விட்டது கேபி, ஷிவானி, ரம்யா என வரிசையாக விட, இறுதியாக மிஞ்சியவர்கள் ரியோ மற்றும் பாலா. ஒரு கட்டத்தில் ரியோவால் முடியவில்லை அவர் விட்டதும் உடனே பாலாவும் விட்டார்.

இறுதிப்போட்டியில் நுழையப்போகும் முதல் நபர் யார்? – பரபரக்கும் பிக்பாஸ்4

இந்த போட்டியிலும் ஆரி ஒரு சண்டையை வளர்த்தார். சோம் செய்த தவற்றை அப்போது சொல்லி அவரை பலூனை விடச் செய்யாமல், பாயிண்ட் வரும்போது சண்டையைப் போட்டு, சோம்ஸை முந்திச் சென்றார்.

அடுத்த டாஸ்க், தலையில் ஒரு கட்டையை முட்டிக்கொடுத்து நிற்க வேண்டும். அதில் வென்றது ரம்யா. உண்மையில் போட்டித் தொடங்கும்போது என் உயரத்துக்கு ஏற்ற கட்டை இல்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார் ரம்யா. இந்தப் போட்டியிலும் இரண்டாம் இடம் ரியோவுக்கு. அநேகமாக பிக்பாஸ் டைட்டிலின்போதும் இதுவே நடக்கும் என்பதற்கான அறிகுறியாக இது இருக்குமோ?