102 அடியை நெருங்கும் பவானிசாகர்! எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம்

 

102 அடியை நெருங்கும் பவானிசாகர்! எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம்

பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாகும். ஆனால் விதிமுறைப்படி 102 அடி நிறைந்தவுடன் அணையில் இருந்து உபரி நீர் திறக்க வேண்டும். தற்போது நீர்ப்பிடிப்புப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணை நேற்று 101 அடியை எட்டியது. 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

102 அடியை நெருங்கும் பவானிசாகர்! எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம்

இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.38 அடியாக உள்ளது. அணைக்கு 9994 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும் என மொத்தம் 3050 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

102 அடியை நெருங்கும் பவானிசாகர்! எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம்

102 அடியை பவானிசாகர் அணை நெருங்கி வருவதால் எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும் என்ற காரணத்தால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.