2022ல் நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி… பா.ஜ.க. அறிவிப்பு

 

2022ல் நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி… பா.ஜ.க. அறிவிப்பு

2022ல் நடைபெற இருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் 117 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று பா.ஜ.க. அறிவித்துள்ளது.

பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளமும், பா.ஜ.க.வும் நீண்ட காலமாக கூட்டணி வைத்தே சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வந்தன. சிரோன்மணி அகாலி தளம் மாநிலத்தில் வலுவான கட்சி என்பதால் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் 94 தொகுதிகளிலும், பா.ஜ.க. 23 தொகுதிகளிலும் நீண்ட காலமாக போட்டியிட்டு வந்தன.

2022ல் நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி… பா.ஜ.க. அறிவிப்பு
பா.ஜ.க.

சிரோன்மணி அகாலி தளம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை சிரோன்மணி அகாலி தளம் எதிர்த்தது. மேலும் அந்த கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அந்த கட்சி வெளியேறியது. அதேசமயம் பா.ஜ.க.வோ போனால் போகட்டும் என்ற விட்டு விட்டது.

2022ல் நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி… பா.ஜ.க. அறிவிப்பு
சிரோன்மணி அகாலி தளம்

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியதாவது: 2022 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 117 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். பஞ்சாபில் உள்ள அனைத்து 117 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிட பா.ஜ.க. தனது அமைப்பை ஒரு போர்க்காலத்தில் பலப்படுத்துகிறது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை ஆன்லைனில் 10 மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.