சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்! முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்

 

சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்! முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மக்கள் பணிக்கு செல்ல இயலாததால், பல தொழில் நிறுவனங்கள் முடங்கின. குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் திரைத்துறையும் முடங்கியதால், அதனை சார்ந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக் குறியானது. இந்த இக்கட்டான சூழலில் அவர்களுக்கு நடிகர்களும், நடிகைகளும் நிதியுதவி அளித்தனர்.தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திரைத்துறை படப்பிடிப்புகளுக்கும் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.

சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதி கொடுங்கள்! முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்

அவர் எழுதிய கடிதத்தில், “படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள். அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம். பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர். சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

முதல்வர் தயைகூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு , பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும். திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.