‘சூர்யா எப்போதுமே தவறாக பேசமாட்டார்’ இயக்குனர் பாரதிராஜா கருத்து!

 

‘சூர்யா எப்போதுமே தவறாக பேசமாட்டார்’ இயக்குனர் பாரதிராஜா கருத்து!

நீட் தேர்வுக்கு எதிரான சூர்யாவின் கருத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா பேசியுள்ளார்.

தமிழக மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்வதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சூர்யா, கடுமையான விமர்சனங்களுடன் பதிவிட்டிருந்தார். அதாவது, உயிருக்கு பயந்து காணொளி வாயிலாக நீதிமன்றம் விசாரணை நடத்துவதாக கூறியிருந்தார். சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

‘சூர்யா எப்போதுமே தவறாக பேசமாட்டார்’ இயக்குனர் பாரதிராஜா கருத்து!

அந்த கடிதத்தில், உயிருக்கு பயந்து காணொளியில் விசாரணை நடத்துவதாக சூர்யா கூறியுருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாகவும் மாண்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சுதந்திரம், நீட் தேர்வு பற்றிய கோபத்தால் தான் சூர்யா அவ்வாறு அறிக்கை வெளியிட்டுருப்பதாகவும் அவரது கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

‘சூர்யா எப்போதுமே தவறாக பேசமாட்டார்’ இயக்குனர் பாரதிராஜா கருத்து!

இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவு அளித்து பேசிய இயக்குனர் பாரதிராஜா, சூர்யா எப்போதுமே தவறாக நடிக்கவும் மாட்டார், தவறாக பேசவும் மாட்டார் என தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையை தவிர்க்கவே புதிய தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.