‘எஸ்பிபி-க்கு பாரத ரத்னா, நினைவு மண்டபம்’ : அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!
Sep 27, 2020, 13:23 IST1601193180000
மறைந்த பாடகர் எஸ்பிக்கு மத்திய அரசின் பாரத ரத்னா வழங்குவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாளையொட்டி கோவில்பட்டியில் சி.பா.ஆதித்தனார் படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமரரும் தமிழ் படிக்க வேண்டும் என விரும்பியவர் சி.பா.ஆதித்தனார்.பெரியார், அண்ணா வழியில் திராவிட இயக்கத்தில் பணியாற்றியவர் என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாளை செயற்குழு கூட்டத்தில் சசிகலா, முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்யப்படுமா என்பது குறித்து கூற முடியாது என்றார். மேலும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபிக்கு நினைவு மண்டபம், பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என்றார்.