தரணி ஆளக் கூடிய நட்சத்திரம் – ‘பரணி’ நட்சத்திரம் பொதுப் பலன்கள்

 

தரணி ஆளக் கூடிய நட்சத்திரம் – ‘பரணி’ நட்சத்திரம் பொதுப் பலன்கள்

`பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்பது ஜோதிடத்துறையில் கூறப்படும் பழமொழி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல பேர் கூடியிருக்கும் இடத்தில் தனித்து தெரியக் கூடியவர்களாக இருப்பார்கள்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலைகளில் சிறந்து விளங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். தங்களுடைய பெற்றோரிடம் அதிக பாசம் கொண்டவர்களாகவும், தான தர்மம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அத்துடன் தைரியசாலிகளாக இருப்பார்கள். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இயல்பிலேயே ஆளுமைத் திறன் இருக்கிறது. ஆகவே அவர்களை தேடி அதிகாரப் பதவிகள் வரும். எதிலும் நேர்த்தியை கடைபிடிக்க கூடியவர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவை ரசித்து ருசித்து சாப்பிடக் கூடியவர்கள். அதனால் அவர்களை `போஜனப் பிரியர்’ என்றே கூறலாம்.

தரணி ஆளக் கூடிய நட்சத்திரம் – ‘பரணி’ நட்சத்திரம் பொதுப் பலன்கள்

பரணி நட்சத்திரக்காரர்கள் படிப்பில் அதிக ஆர்வம் உடையவர்களாகவும், எதையும் பகுத்தறியும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த பிரச்னையையும் எளிதாக கடந்து விடக் கூடியவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளம் பருவத்திலேயே செல்வமும், செல்வாக்கும் பெற்று விடுவார்கள். வயது முதிர்ந்த காலத்தில் கூட அனுபவத்தின் காரணமாக இவர்களை தேடி உயர்ந்த பதவிகள் வரும். மற்றவர்களின் பிரச்னைக்கு ஆலோசனை கூறி, அவர்களின் குறைகளை போக்க உதவி செய்வார்கள்!