அய்யாவின் அருள் என்றுமிருக்க வாழ்த்துகிறேன்… மு.க.ஸ்டாலினுக்கு பாக்யராஜ் கடிதம்!

 

அய்யாவின் அருள் என்றுமிருக்க வாழ்த்துகிறேன்… மு.க.ஸ்டாலினுக்கு பாக்யராஜ் கடிதம்!

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மரியாதைக்குரிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடனும் வாழ்த்துக்களுடன் உங்கள் பாக்கியராஜ் எழுதுவது,

அய்யாவின் அருள் என்றுமிருக்க வாழ்த்துகிறேன்… மு.க.ஸ்டாலினுக்கு பாக்யராஜ் கடிதம்!

பொறுத்தார் பூமியாள்வார். ஆளும் பொறுப்பு தங்களைத் தேடி வந்து அப்பாவின் ஆசை கனிந்துள்ளது. அதைவிட தங்களது தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும் மிக உன்னதமென என் மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததும் சந்தித்து வாழ்த்து சொல்ல நினைத்தேன். ஆனால், எனக்கிருந்த நோயின் அறிகுறி சளி தொல்லை காரணமாக தங்களின் அசௌகரியத்தை விரும்பாது தவிர்த்தேன். இப்போது அதிகாரப்பூர்வமாக தொற்று உறுதியானதால் காலதாமதமின்றி கடிதம் மூலமாக வாழ்த்துகிறேன்.

அய்யாவின் அருள் என்றுமிருக்க வாழ்த்துகிறேன்… மு.க.ஸ்டாலினுக்கு பாக்யராஜ் கடிதம்!

தமிழ் சமுதாயத்தை சீரமைக்கும் சிறப்பான சேவை பணியாற்றிய அப்பாவின் எழுத்தாணியுடன், அன்பு மகனான தாங்கள் அனைத்து தமிழ் தாய்மார்களின் சுமை குறைத்து மன நோயாளிகளின் துயர் துடைக்கும் பொருட்டு நிறைவான பால் வார்த்து விட்டீர்கள் குறைவான விலையில். நெகிழ்வாக இருந்தது. காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்து இருக்கிறீர்கள். மகிழ்வு.

அய்யாவின் அருள் என்றுமிருக்க வாழ்த்துகிறேன்… மு.க.ஸ்டாலினுக்கு பாக்யராஜ் கடிதம்!

எனது குடும்பத்தார், பாக்கியா குடும்பத்தார் மற்றும் எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சியை அரங்கேற்றி நாடு நலம் பெற அய்யாவின் அருள் இருக்குமென வாழ்த்துகிறேன்” என்று எழுதியுள்ளார்.

அய்யாவின் அருள் என்றுமிருக்க வாழ்த்துகிறேன்… மு.க.ஸ்டாலினுக்கு பாக்யராஜ் கடிதம்!