தாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் -எஜமானர் இறந்ததும் தற்கொலை செய்து கொண்ட நாய்..

 

தாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் -எஜமானர் இறந்ததும் தற்கொலை செய்து கொண்ட நாய்..

நாயை போல விசுவாசமாகவும் ,நன்றியுடனும் இருங்கள் என்று சொல்வார்கள் உண்மையிலே இந்த குணம் ஒரு சோகமான வழியில், தனது எஜமானர் இறந்ததும் ஒரு நாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மூலம் உண்மையாகியுள்ளது.

தாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் -எஜமானர் இறந்ததும் தற்கொலை செய்து கொண்ட நாய்..கான்பூரின் மாலிக்புரம் பகுதியில் வசித்து வரும் டாக்டர் ராஜ்குமார் சச்சானின் மனைவி டாக்டர் அனிதா ராஜ் 13 ஆண்டுகளாக ஒரு பெண் நாயை வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தார் .அதை தன்னுடைய பிள்ளை போலவே வீட்டில் வளர்த்தார் .ஒரு நாள் டாக்டர் அனிதாராஜுக்கு திடீரென சிறுநீரக கோளாறு ஏற்பட்டது இதற்காக அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் தாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் -எஜமானர் இறந்ததும் தற்கொலை செய்து கொண்ட நாய்..அவரை வீட்டில் காணாததால் அந்த நாய் தவித்து வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை டாக்டர் அனிதாராஜ் திடீரென இறந்து போனார் .
அவர் இறந்ததும் அவரின் சடலத்தினை வீட்டிற்கு கொண்டு வந்தனர் .அப்போது இறந்த அவரின் உடலை பார்த்து அவர் விசுவாசமாக வளர்த்து வந்த நாய் அலறி அழுது துடித்தது .இது அந்த இறப்புக்கு வந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவைத்தது .அது அழுது துடிப்பதை பார்த்த அந்த வீட்டினர் அந்த நாயை ஒரு அறையினுள் வைத்து பூட்டி விட்டனர் .ஆனால் அன்று மாலையில் அனிதாவின் சடலத்தினை தகனம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே கொண்டு போன போது ,அந்த நாய் யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது .

http://

அந்த காட்சியினை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் .ஒரு மருத்துவர் தம்பதியினருக்கு சொந்தமான நாய் இப்படி தற்கொலை செய்து இறந்த செய்தி, காட்டுத்தீ போல் அந்த ஊர் முழுவதும் பரவியது .உண்மையிலே நாய் நன்றியுள்ள விசுவாசமான விலங்கு என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது .