மன அமைதி அருளும் ஶ்ரீராகவேந்திர சுவாமி மந்திரம்!

 

மன அமைதி அருளும் ஶ்ரீராகவேந்திர சுவாமி மந்திரம்!

ஶ்ரீராகவேந்திரர் நம்முடைய தமிழகத்தில் புவனகிரியில் பிறந்தவர். வைணவத்தையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர். பெருமாளின் பக்தரான பிரஹலாதரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். அவரை நினைத்து தினமும் பூஜை செய்து வந்தால் நம்முடைய சந்ததியை செழிக்கச் செய்வார்.

மன அமைதி அருளும் ஶ்ரீராகவேந்திர சுவாமி மந்திரம்!

ஸ்ரீராகவேந்திரர் காயத்ரி மந்திரம்:

ஓம் பிரகலநாதாய வித்மஹே

வியாசராஜாய தீமஹி

தந்நோ ஸ்ரீராகவேந்திர ப்ரசோதயாத்

விளக்கம்:

பிரகலாதன் வழி வந்த மகானே. வியாச ராஜனே. குரு ராகவேந்திர மகானே எங்களுக்கு அருள்புரிவாய்.

ஶ்ரீராகவேந்திரரின் இந்த காயத்ரி ஸ்லோகத்தை சொல்லி வழிபடும் போது, பொங்கல் உள்ளிட்ட இனிப்புகளை நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த நைவேத்தியத்தை அருகில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும். இந்த மந்திரத்தைச் சொல்பவர்கள் மனம் தெளிவு அடையும். தன்னம்பிக்கை பெருகும். சத்குருவின் அன்பும் ஆசியும் கிடைக்கும். தொடர்ந்து வழிபட்டு வந்தால் அற்புத காரியங்களை நடத்தித் தருவார்!