செம்பு பாத்திரத்தை யூஸ் பண்ணுங்க ; இதெல்லாம் நடக்கும்!

 

செம்பு பாத்திரத்தை யூஸ் பண்ணுங்க ; இதெல்லாம் நடக்கும்!

செம்பு பாத்திரத்தில் உணவையோ அல்லது நீரையும் உட்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் . காப்பர் என அழைக்கப்படும் செம்பு பாத்திரத்தில் உணவு சாப்பிடுவது மற்றும் நீர் அருந்துவதன் மூலம் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்பெல்லாம் செம்பு பாத்திரத்தில் தான் தண்ணீர் பிடித்து அதை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது கேன் வாட்டர், மினரல் வாட்டர் என வந்து விட்டால் செம்பு குடங்களை நாம் மறந்து விட்டோம் . ஆனால் செம்பு பாத்திரத்தில் உள்ள நன்மைகள் எத்தகையது? அதை உபயோகப்படுத்துவதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை சொல்கிறது இந்த செய்தி தொகுப்பு.

செம்பு பாத்திரத்தை யூஸ் பண்ணுங்க ; இதெல்லாம் நடக்கும்!

நமது உடலில் செம்பு அல்லது தாமிர சத்து குறைவாக இருக்கும் பட்சத்தில் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறையும். அதனால் உணவில், செம்பை நேரடியாகவோ அல்லது உட்செலுத்துதல் மூலமாகவோ தொற்று நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. அடிக்கடி காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம் . அதனால் அவர்கள் செம்பு /காப்பர் பாத்திரத்தில் நீரை அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிக்கும். அத்துடன் பாக்டீரியாக்களை கொன்று நன்மைகளை அளிக்கக் கூடிய சக்தி செம்பு பாத்திரத்திற்கு உண்டு.

செம்பு பாத்திரத்தை யூஸ் பண்ணுங்க ; இதெல்லாம் நடக்கும்!

வலுவான எலும்புகளுக்கு செம்பு பாத்திரம் உதவிகரமாக இருக்கும். நாம் ஓரிடத்திலேயோ, அலுவலகத்திலோ அல்லது வீட்டிலேயே முடங்கி கிடக்கும் போது நமது எலும்பு பலவீனமடையும். அப்படிப்பட்டவர்களுக்கு வைட்டமின் டி என்பது தேவையான ஒன்று. செம்பு தாது ஒருவருக்கு குறைவாக இருக்கும் போதுதான் அவர்களின் எலும்பு தேய்மானம் அடையும் என்று கூறப்படுகிறது, இது ஆஸ்டியோபோரோசிஸ் நோயை ஏற்படுத்தும் அபாயத்தையும் கொடுக்கும். இதனால் வலுவான எலும்புகளை பெற செம்புப் பாத்திரத்தில் நாம் உணவு அல்லது தண்ணீரை அருந்தும் போது வலுவான எலும்புகளையும் பெறலாம்.

செம்பு பாத்திரத்தை யூஸ் பண்ணுங்க ; இதெல்லாம் நடக்கும்!

ரத்த ஓட்டம் சீராக இருக்க செம்பு நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதன் மூலம் இதய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். அத்துடன் ஆயுர்வேதத்தின்படி செம்பு, அமிலத்தன்மை , இதய நோய், இருமல், சளி போன்ற நோய்களை தடுக்கவும், அதிலிருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகிறது. அத்துடன் செம்பு தாது குறையும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இதனால் சீரான இரத்த ஓட்டத்தை பெற செம்பு பாத்திரத்தில் முடிந்த அளவு நாம் உணவை உட்கொள்வது நல்லது. செம்பு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

செம்பு பாத்திரத்தை யூஸ் பண்ணுங்க ; இதெல்லாம் நடக்கும்!

செம்பு பாத்திரத்தில் தண்ணீரை குடிக்கும் போது நமக்கு கூடுதல் ஆற்றலைக் கொடுக்கும். அத்துடன் செம்பு தாது உடல் உறுப்புகளை சீராக இயங்க உதவுகிறது. நல்ல ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது செம்பு. செம்பு கலந்த நீரையும் உணவையும் உட்கொள்ளும் போது ரத்தம் தானாகவே தூய்மையாகுமாம். செம்பு வாதம், பித்தம் ,கபம் ஆகியவற்றை சீர்படுத்தி நம் உடலில் உள்ள அமிலத்தன்மையை கட்டுப்படுத்தும். அத்துடன் முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் ஆகியவற்றை நீக்கி இயற்கையாக சருமத்தை பளபளவென அழகாக வைத்துக்கொள்ள உதவுகிறது.