“அதிமுகவை பார்க்கும் முன், திமுகவில் ஒற்றுமை தேவை” – மாஃபா பாண்டியராஜன்

 

“அதிமுகவை பார்க்கும் முன், திமுகவில் ஒற்றுமை தேவை” – மாஃபா பாண்டியராஜன்

சென்னை

அதிமுகவின் ஒற்றுமையை பார்ப்பதற்கு முதலில் திமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னை ஆவடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கால்வாய் மற்றும் சாலை பணிகளை ஆய்வுசெய்த பின்

“அதிமுகவை பார்க்கும் முன், திமுகவில் ஒற்றுமை தேவை” – மாஃபா பாண்டியராஜன்

செய்தியாளர்களை சந்தித்த அவர், கொள்கை ரீதியாக திமுக எடுத்துவைக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும், நாங்கள் பதில் கொடுத்துக்கொண்டே இருப்போம் என்றும், முதல்வர் – துணை முதல்வர் இருவரும் இணைந்த கைகளாக வந்துவிட்டனர் என்பதை ஸ்டாலினால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அதிமுகவில்

“அதிமுகவை பார்க்கும் முன், திமுகவில் ஒற்றுமை தேவை” – மாஃபா பாண்டியராஜன்


போராட்டங்கள் வெடிக்கும், தர்மயுத்தம் நடக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு, அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரு குறலாக நின்று முதல்வர் வேட்பாளரை
அறிவித்தது, பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறிய அமைச்சர் பாண்டியராஜன், அதிமுகவை பொருத்தவரை ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு ஒரு குரலாக மக்களிடையே ஒலித்து கொண்டிருக்கிறது என கூறினார்