வளர்ப்புத் தந்தை கொடுமை தாங்கமுடியாத மகன் தற்கொலை!

 

வளர்ப்புத் தந்தை கொடுமை தாங்கமுடியாத மகன் தற்கொலை!

தனது வளர்ப்புத் தந்தை தன்னையும் மனைவியையும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டிய நபர் தற்கொலை செய்வதற்கு முன் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட நபர் குர்ஜாந்த் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

அந்த நபர் தற்கொலை செய்வதற்கு முன்னர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இறந்தவரும் அவரது மனைவியும் பலமுறை அவரது வளர்ப்பு தந்தையால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பல முறை அந்த தந்தை தனது மனைவியைத் தாக்க முயற்சித்த போதெல்லாம் எதிர்த்து வந்துள்ளார். மேலும் ​​போதை மருந்து உட்கொண்ட குற்றச்சாட்டில் வளர்ப்பு தந்தையை போலீசில் தெரிவித்துள்ளார். வளர்ப்புத்தந்தை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதால் அந்த நபர் தனது மாமியார் வீட்டில் தங்கியுள்ளார்.

வளர்ப்புத் தந்தை கொடுமை தாங்கமுடியாத மகன் தற்கொலை!

வீடியோவில், தனது வளர்ப்பு தந்தை, அவரது மனைவி, மகள் உட்பட ஐந்து பேரைக் குற்றம் சாட்டியுள்ளார். தான் தற்கொலை செய்யப் போவதாகவும், கூறிய ஐந்து நபர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட நபரை அவரது பெற்றோர்கள் 22 ஆண்டுகளுக்கு தத்தெடுத்தனர். வீடியோவை வைத்து ஐந்து பேருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 ன் கீழ் தற்கொலைக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.