சூலூர் அருகே பியூட்டி பார்லர் உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை!

 

சூலூர் அருகே பியூட்டி பார்லர் உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை!

கோவை

சூலூர் அருகே பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள சோமனூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கங்காதேவி (37). இவர் அதே பகுதியில் அழகு கலை நிலையம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கங்காதேவி நாள்தோறும் கடைக்கு சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். நேற்று இரவு 9 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனால், சீனிவாசன் அவரை தேடி அழகு கலை நிலையத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, கங்காதேவி கை, கால்கள் கட்டப்பட்டும், வாய் அடைக்கப்பட்டும் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கங்காதேவி உயிரிழந்தார்.

சூலூர் அருகே பியூட்டி பார்லர் உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை!

தகவல் அறிந்த சூலூர் போலீசார், கங்காதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மர்மநபர்கள் கங்காதேவி அணிந்திருந்த 19 சவரன் தங்க நகைகளை திருடியதுடன், அவரை கற்பழித்து கொடூரமாக சித்ரவதை செய்துள்ளதும் தெரிய வந்தது.

சம்பவம் குறித்து தகவலறிந்த, கோவை சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், இளம்பெண் கற்பழித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.