“போதையால் மாறிய பாதை” -அழகு நிலைய பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

“போதையால் மாறிய பாதை” -அழகு நிலைய பெண்ணுக்கு நடந்த கொடுமை

ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சென்ற ஒரு அழகு நிலைய பெண்ணை மது போதையில் பலர் சேர்ந்து பலாத்காரம் செய்த விஷயம் அந்த பகுதியில் அதிர்வை உண்டாக்கியுள்ளது .

“போதையால் மாறிய பாதை” -அழகு நிலைய பெண்ணுக்கு நடந்த கொடுமை


உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜின் பெனிகஞ்சில் வசிக்கும் ஒரு 20 வயது பெண் அங்கு ஒரு அழகு நிலையம் நடத்தி வருகிறார் .அவருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு .பல அழகிய பெண்கள் அவரின் அழகு நிலையத்திற்கு ரெகுலர் கஸ்டமர்களாக உள்ளார்கள் .அப்போது அவரின் வாடிக்கையாளர் ஒருவர் இந்த அழகு நிலையம் நடத்தும் பெண்ணை தங்களின் வீட்டு பிறந்த நாள் விழாவிற்கு அழைத்தார் .
அந்த பெண்ணும் சுலேம் சராயில் நடந்த அந்த பிறந்த நாள் விழாவுக்கு சென்றார் .அப்போது அங்கிருந்த ஆண்கள் சிலர் அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து குடிக்ககொடுத்துள்ளார்கள் .அவரும் குளிர்பானம் என்று நினைத்து அந்த மதுவை குடித்துள்ளார் .அளவுக்கதிகமாக போதையேறியதும் அந்த பெண் போதையில் மயங்கி அங்கே விழுந்துள்ளார் .அப்போது அந்த வாலிபர்கள் பலர் சேர்ந்து அந்த பெண்ணை ஒரு தனிமையான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .
பிறகு போதை தெளிந்து அந்த பெண் பார்த்தபோது தன்னை போதை மயக்கத்தில் பலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை உணர்ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார் .போலிஸார் வழக்கு பதிவு செய்து போதை மயக்கத்தில் அழகு நிலைய பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்களை தேடி வருகிறார்கள் .

“போதையால் மாறிய பாதை” -அழகு நிலைய பெண்ணுக்கு நடந்த கொடுமை