“2 வாரங்களுக்கு மிக மிக கவனமாக இருங்கள்” சுகாதாரத்துறை எச்சரிக்கை!

 

“2 வாரங்களுக்கு மிக மிக கவனமாக இருங்கள்” சுகாதாரத்துறை எச்சரிக்கை!

மக்கள் தேவையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“2 வாரங்களுக்கு மிக மிக கவனமாக இருங்கள்” சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்நிலையில் சென்னை போரூரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக இருக்கிறது.
வரும் 2 வாரங்களுக்கு பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 81,871 கொரோனா படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. வெண்டிலேட்டர் வசதிகள் தேவையான அளவுக்கு இருக்கிறது. மக்கள் தேவையில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

“2 வாரங்களுக்கு மிக மிக கவனமாக இருங்கள்” சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தொடர்ந்து பேசிய அவர், ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் 91.6% பாதுகாப்பானது. அடுத்த 2 வாரங்கள் மிக மிக முக்கியம் என்பதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 2 வாரங்களுக்கு அனைவரும் முகக்கவசங்கள் அளித்தாலே கொரோனா குறைய வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1199 ஆக அதிகரித்துள்ளதாகவும், குறிப்பிட்ட குடியிருப்பு அல்லது தெருவில் 3 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த இடம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்