2021-22 ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

 

2021-22 ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

2021-22 சீசனுக்கான இந்தியாவில் நடக்கவிருக்கும் சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2021-22 ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

நியூசிலாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்த சீசனில் இந்தியாவுடன் மோதுகிறது. நியூசிலாந்து அணி நவம்பர் மாதத்தில் மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் மோதுகிறது.

இந்த தொடருக்கு பிறகு இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் நடைபெறுகிறது. அதன் பிறகு இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆடுகின்றன. அதன்பிறகு மார்ச் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் தொடர் நடைபெறும்.

இதனைதொடர்ந்து ஜூன் மாதத்தில் தென்னாபிரிக்க அணி இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு டி20 போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.