மீண்டும் களைகட்டவுள்ள ஐபிஎல் திருவிழா! அட்டவணை வெளியீடு

 

மீண்டும் களைகட்டவுள்ள ஐபிஎல் திருவிழா! அட்டவணை வெளியீடு

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மீண்டும் களைகட்டவுள்ள ஐபிஎல் திருவிழா! அட்டவணை வெளியீடு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை செப்டம்பர் 18ம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. கடைசி லீக் போட்டியாக கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

மீதமுள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.