“அண்ணாமலையின் போராட்டம்- அரசியல் நாடகம்”

 

“அண்ணாமலையின் போராட்டம்- அரசியல் நாடகம்”

மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் தெரிவித்துள்ளார்.

“அண்ணாமலையின் போராட்டம்- அரசியல் நாடகம்”

மேகதாது அணை கட்ட கர்நாடக பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தஞ்சையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் அண்ணாமலை போராட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மாய், “அண்ணாமலை அரசியலுக்காக இந்த ஆர்ப்பாட்டத்தை செய்கிறார். அதைப்பற்றி சிறிதளவும் கர்நாடக அரசு கவலை கொள்ள போவதில்லை. திட்டமிட்டபடி மத்திய அரசிடம் விரைவில் அனுமதி பெற்று அணை கட்டுவது உறுதி. மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டம் குடிநீருக்கானது. வறட்சி காலத்தில் உரிய முறையில் நீரைப் பங்கிட்டுக் கொள்வதற்கானது இது அனைவருக்கும் தெரியும். நேற்று முன்தினம் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மீண்டும் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து அனுமதியும் கிடைத்த உடன் அணை உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்கபடும்‌” எனக் கூறினார்.