கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

 

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

சென்னை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா உறுதியானது. மேலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் 2 பேர் உள்பட மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு தொற்று உறுதியானதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவர் அறிவுரைப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தானே 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

இதையடுத்து நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கடந்த 2 ஆம் தேதி சென்றார். அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொற்றிலிருந்து குணமடைந்தார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.