கு.பானுமதி மறைவு! ஒருவார கால துக்கம் கடைப்பிடிக்க தொண்டர்களுக்கு அறிவிப்பு!

 

கு.பானுமதி மறைவு! ஒருவார கால துக்கம் கடைப்பிடிக்க தொண்டர்களுக்கு அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மூத்த சகோதரி கு.பானுமதி கொரோனாவினால் உயிரிழந்ததை அடுத்து அவரது மறைவுக்கு
ஒரு வாரகாலம் துக்கம் கடைபிடிக்க கட்சியின் தலைமை தொண்டர்களுக்கு அறிவித்துள்ளது.

திருமாவளவனின் மூத்த சகோதரியும், லட்சோப லட்சம் விடுதலை சிறுத்தைகளின் அன்புக்குரியவராகவும் திகழ்ந்த கு.பானுமதி உயிரிழந்தார். திருமாவளவனை மட்டுமல்லாது ஒட்டுமொத்த விடுதலை சிறுத்தைகளையும் தனது உடன் பிறந்தவர்களாகவே கருதி பாசம் காட்டிய பானுமதியின் மறைவு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேரிழப்பாகும்.

கு.பானுமதி மறைவு! ஒருவார கால துக்கம் கடைப்பிடிக்க தொண்டர்களுக்கு அறிவிப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி்யின் சார்பில் பானுமதி அவர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறோம். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கட்சியின் கொடிகளை ஒருவார காலத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும், துக்கம் கடைபிடிக்குமாறும் விடுதலை சிறுத்தைகளை கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.