அனுமதியின்றி பேனர்: அதிமுகவை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு!

 

அனுமதியின்றி பேனர்: அதிமுகவை சேர்ந்த  2 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை விருகம்பாக்கத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி பேனர்: அதிமுகவை சேர்ந்த  2 பேர் மீது வழக்குப்பதிவு!

அதிமுக எம்எல்ஏ ரவி மகளின் திருமணத்திற்காக பேனர் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அதிமுகவை சேர்ந்த கணேஷ் , ரமேஷ் ஆகிய இருவர் மீதும் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அனுமதியின்றி பேனர்: அதிமுகவை சேர்ந்த  2 பேர் மீது வழக்குப்பதிவு!

கடந்த ஆண்டு சென்னை பள்ளிக்கரணையில் பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அனுமதியின்றியோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு இடங்களிலோ பேனர் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின் சில மாதங்களாகப் பேனர் கலாச்சாரம் இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது கவனிக்கத்தக்கது.