வங்கிகளின் வேலை நேரம் மேலும் குறைப்பு

 

வங்கிகளின் வேலை நேரம் மேலும் குறைப்பு

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில் வங்கிகள் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் வேலை நேரம் மேலும் குறைப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 181 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 6ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதேசமயம் கொரோனாவால் 311 பேர் ஒரே நாளில் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் மொத்தமாக உயிரிழப்பு 17ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருந்த நிலையில், இன்று முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.