இசைக்குழு டிரம்ஸ் கலைஞர் தூக்கு போட்டு தற்கொலை!

 

இசைக்குழு டிரம்ஸ் கலைஞர் தூக்கு போட்டு தற்கொலை!

திருச்சி : 04.09.20

எடமலைப்பட்டி புதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் திவாகர் (வயது 29 ), இவர் அருகில் உள்ள பனியன் கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வந்தார். அதேபோல் திருச்சி சங்கீத பறவைகள் மெல்லிசை குழுவில் இசை கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்தும் வந்துள்ளார்.

இசைக்குழு டிரம்ஸ் கலைஞர் தூக்கு போட்டு தற்கொலை!

இந்நிலையில் நேற்று இசைக்குழுவினருடன் இணைந்து பயிற்சி வகுப்புகளை எடுத்து விட்டு பயிற்சி பள்ளியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு மின்விசிறியில் உள்ள இரும்பு பைப்பில் நைலான் கயிரை கட்டி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இசைக்குழு டிரம்ஸ் கலைஞர் தூக்கு போட்டு தற்கொலை!

உடலை கைப்பற்றிய எடமலைப்பட்டி போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த ரூமில் உள்ள டைரியில் தன்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தான் மட்டுமே காரணம் என்றும் எழுதி வைத்துள்ளார்.