பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தை! சாலையோரம் வீசிச்சென்ற கொடூர தாயை தேடுகிறது போலீஸ்!

 

பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தை! சாலையோரம் வீசிச்சென்ற கொடூர தாயை தேடுகிறது போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டம் காட்டுப்பாக்கம் சிவன் கோவில் எதிரில், சாலை ஓரமாக ஒரு பச்சிளங்குழந்தயின் அழுகுரல் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை துணியில் சுற்றப்பட்டு கிடந்தது.

பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தை! சாலையோரம் வீசிச்சென்ற கொடூர தாயை தேடுகிறது போலீஸ்!

பொதுமக்கள் அக்குழந்தையினை மீட்டு, பாலுக்கு அழும் அக்குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தனர். பின்ன, பாணாவரம் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் அக்குழந்தையினை கைப்பற்றி, மேல்களத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி செய்யப்பட்ட பின்னர், 108 ஆம்புலன் மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தை! சாலையோரம் வீசிச்சென்ற கொடூர தாயை தேடுகிறது போலீஸ்!

முறைதவறி பிறந்ததால் குழந்தையை சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டார்களா? வீசிச்சென்ற தாய் யார்? என்பது குறித்து பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றார்கள்.

பிறந்த குழந்தையை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம ல் தூக்கி எறிந்துவிட்ட சென்றிருக்கும் தாயின் கொடூரச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.