தி பேமிலி மேன் 2 தொடரை தடை செய்க! மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

 

தி பேமிலி மேன் 2 தொடரை தடை செய்க! மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

2019ல் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட் அடித்த சீரிஸான தி பேமிலி மேனின் அடுத்த பகுதியில் ட்ரைலர் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. அதில் இத்தொடரில் தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இத்தொடருக்கு தடை விதிக்க வேண்டுமென அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

தி பேமிலி மேன் 2 தொடரை தடை செய்க! மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

இந்நிலையில் தி பேமிலி மேன் 2 தொடரை தடை செய்யக்கோரி தகவல் தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதியுள்ள கடிதத்தில், “ ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை தி பேமிலி மேன் 2 புண்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி இழிவுப்ப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. எனவே தி பேமிலி மேன் 2 இந்தி தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.