ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை… தனியார் பள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்! – ராமதாஸ் அதிரடி

 

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை… தனியார் பள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்! – ராமதாஸ் அதிரடி


ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்காத வரை பணம் பறிக்கும் கும்பல் திருந்தாது, எனவே இது போன்ற பள்ளி நிர்வாகிகளுக்குக் கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் பள்ளிகளில் ப்ரீ கே.ஜி முதல் எல்லா வகுப்புகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகின்றன. எனவே, கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்று பள்ளிகள் வற்புறுத்துகின்றன. வாரத்துக்கு ஒரு நாளை, அரை மணி நேர ஆன்லைன் வகுப்புகளை நடத்திவிட்டு

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை… தனியார் பள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்! – ராமதாஸ் அதிரடி

ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் எனவே அனைவரும் கட்டாயம் ஃபீஸ் கட்டியே ஆக வேண்டும் என்று பள்ளிகள் வற்புறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கட்டணக் குறைப்பு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த விதிமுறையை பள்ளிகள் ஏற்கவில்லை. நிர்ணயித்த கட்டணத்தை பல பள்ளிகள் வசூலித்து முடிக்கும் நிலைக்கு வந்துவிட்டன. அரசு இதை வேடிக்கை பார்த்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட ட்வீட் பதிவில், “நெஞ்சு பொறுக்குதில்லையே!
பள்ளி வகுப்புகளை விரும்பும் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளை விரும்புவதில்லை. ஆனாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் அந்தக் குழந்தைகளை டார்ச்சர் செய்து கொண்டு இருக்கின்றன பணம் பறிக்கும் பள்ளி நிர்வாக கும்பல்கள்!

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை… தனியார் பள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்! – ராமதாஸ் அதிரடி


சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியாகி விட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளிக் கல்வித்துறையோ, ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்வதாக அறிவிக்காமல், தனியார் பள்ளிகள் நோகாத வகையில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என்று பூசி மெழுகுகிறது. இது சரியா?
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை என்று கல்வித்துறை அறிவிக்கும் வரை பணம் பறிக்கும் கும்பல்கள் திருந்தாது. பள்ளிக்கல்வித்துறை அறிவிக்காத நிலையில் இந்த டார்ச்சருக்கு எவ்வாறு முடிவு கட்டுவது? எப்படி முடிவு கட்டுவது? எந்த வழியில் முடிவு கட்டுவது?

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை… தனியார் பள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்! – ராமதாஸ் அதிரடி


ஆன்லைன் வகுப்பு டார்ச்சரைத் தொடரும் ஈவு இரக்கமற்ற, பணத்தாசை பிடித்த தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும். சட்டத்தின் உதவியுடன், மக்களின் ஒத்துழைப்புடன், கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் விரைவில் அதை செய்து முடிப்போம்!” என்று கூறியுள்ளார்.