’இ-பாஸ் நடைமுறையைக் கைவிடுங்கள்’ முதல்வருக்கு சிபிஎம் கட்சி கடிதம்

 

’இ-பாஸ் நடைமுறையைக் கைவிடுங்கள்’ முதல்வருக்கு சிபிஎம் கட்சி கடிதம்

2020 ஆண்டு மார்ச் மாதம் மகிழ்ச்சியாகத் தொடங்க வில்லை இந்தியாவுக்கு. காரணம் கொரோனா. அதன் அலை இந்தியாவில் மார்ச் மாதம் முதல் வீசத் தொடங்கியது. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படும் என்று கருதினர். நினைத்தற்கு எதிராக தினந்தோறும் புதிய நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

ஆயினும் கொரோனாவிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் சதவிகிதமும் அதிகரித்து வருகிறது. அதேநேரம் கொரோனா நோய்த் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் சதவிகிதமும் குறைந்து வருகிறது.

’இ-பாஸ் நடைமுறையைக் கைவிடுங்கள்’ முதல்வருக்கு சிபிஎம் கட்சி கடிதம்

கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல இ பாஸ் தேவை. மேலும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இவற்றைக் கைவிடுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியிருக்கிறார். அதில்,

இ-பாஸ்

திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு ஆகிய நான்கு காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது.

தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் சிக்கித் தவிப்பவர்கள், பணி நிமித்தமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள்,  சொந்த ஊர்களுக்கு சென்ற வியாபாரிகள், தினக்கூலி உழைப்பாளிகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், முறைசாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.  அத்தியாவசிய, நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன. அத்தகைய காரணங்களுக்காக பயணிக்க இ-பாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் வேதனையில் தவிக்கின்றனர்.

’இ-பாஸ் நடைமுறையைக் கைவிடுங்கள்’ முதல்வருக்கு சிபிஎம் கட்சி கடிதம்

மேலும் ஒருமுறை ஒரு செல்போன் எண்ணை பதிவிட்டு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், பிறகு அந்த எண்ணைக் கொண்டு, சரியான ஆவணங்களுடன் எத்தனை முறை விண்ணப்பித்தாலும் இ-பாஸ் நிராகரிக்கப்படுகின்றன என செய்திகள் வருகின்றன. அதேநேரத்தில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஆவணம் இல்லாவிட்டாலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும், பரவாமல் தடுப்பதற்கும்  தேவையான மாற்று வழிகளையும் கையாள வேண்டுமெனவும், மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

’இ-பாஸ் நடைமுறையைக் கைவிடுங்கள்’ முதல்வருக்கு சிபிஎம் கட்சி கடிதம்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என்ற நிலையால், சனிக்கிழமைகளில் அதிகப்படியான மக்கள் பொருட்களை வாங்குவதற்கு கடைகளில் குவிகின்றனர். மக்கள் கூட்டமாக கூடும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றாமலும் இருப்பதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது. பிற நாட்களில் கடைபிடிக்கப்படும் விதிகளையே ஞாயிற்றுக் கிழமையும் அமலாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.’ என்று கூறியுள்ளார்.

மேலும் பொதுப்போக்குவரத்தைப் படிப்படியாக இயக்குதல் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தியுள்ளார்.