‘ஒழுங்கா வளர்க்க முடிலன்னா குழந்தை பெத்துக்காதீங்க’ கண் கலங்கிய பாலா!

 

‘ஒழுங்கா வளர்க்க முடிலன்னா குழந்தை பெத்துக்காதீங்க’ கண் கலங்கிய பாலா!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான 3ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

‘ஒழுங்கா வளர்க்க முடிலன்னா குழந்தை பெத்துக்காதீங்க’ கண் கலங்கிய பாலா!

பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி 4 நாட்களே ஆகும் நிலையில், ஹவுஸ் மேட்ஸ்க்கு ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அறந்தாங்கி நிஷா, வேல் முருகன், அனிதா சம்பத், ஆரி ஆகியோர் சொன்ன அவர்கள் வாழ்க்கைப் பயணம் பார்வையாளர்களை கண் கலங்கச் செய்தது. அந்த வகையில், மாடல் பாலா தான் கடந்து வந்த பாதையை சொல்லும் விதமாக இன்றைய நிகழ்ச்சியின் 3ஆவது வெளியாகியுள்ளது.

‘ஒழுங்கா வளர்க்க முடிலன்னா குழந்தை பெத்துக்காதீங்க’ கண் கலங்கிய பாலா!

அதில் பாலா, ‘தான் உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தலை வலிக்கும். எழுந்து பார்த்தல் அப்பா கையில் ஸ்டிக் உடன் குடிபோதையில் நின்று கொண்டிருப்பார். அப்போது தான் எனக்கு தெரியும், அவர் என்ன அடிச்சு இருக்காருன்னு. அவர் கூட சேர்ந்து அம்மாவும் ஆல்கஹால் அடிமையாகிட்டாங்க. ஒழுங்கா வளர்க்க முடிலன்னா குழந்தை பெத்துக்காதீங்க’ என கண் கலங்கியபடி சொல்கிறார். அதனை கேட்டு சக ஹவுஸ்மெட்ஸ் பாலாவை கட்டியணைத்து ஆறுதல் கூறுவது போல புரோமோ முடிகிறது.