‘தாய் பாசத்தை வெளிப்படுத்திய அர்ச்சனா’ மனமுருகிய பாலா கட்டியணைத்த தருணம்!

 

‘தாய் பாசத்தை வெளிப்படுத்திய அர்ச்சனா’ மனமுருகிய பாலா கட்டியணைத்த தருணம்!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா என்ட்ரி கொடுத்ததில் இருந்தே பாலாவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக பட்டிமன்றம் டாஸ்க்கில், அர்ச்சனாவை பாலா எடுத்தெறிந்து பேசியும் குழந்தைத் தனமாக இருப்பதால் அவர் இப்படி பேசுகிறார் என கூறினார் அர்ச்சனா. இதில் இருந்து பாலாவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்தது.

‘தாய் பாசத்தை வெளிப்படுத்திய அர்ச்சனா’ மனமுருகிய பாலா கட்டியணைத்த தருணம்!

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு டாஸ்க்கிலும் அர்ச்சனா மீதான வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் பாலா. தனது வேலையை செய்யாமல் நேற்று பாலா தூங்கியதும், ரியோவிடம் நக்கலாக பேசியதும் போட்டியாளர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் பாலா மீது வெறுப்பான அர்ச்சனா, அவரை கடுமையாக விமர்சித்த நிலையில், பாலா தனியாக அழுவது போல காலை புரோமோ வெளியாகி இருந்தது.

‘தாய் பாசத்தை வெளிப்படுத்திய அர்ச்சனா’ மனமுருகிய பாலா கட்டியணைத்த தருணம்!

இந்த சூழலில், பாலா மீது அர்ச்சனா தனது தாய்பாசத்தை வெளிப்படுத்தவது போல 3ஆவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனா பாலாவிடம், ‘எனக்கு உன்ன ஆரம்பத்துல இருந்தே பிடிக்காது. நான் உன்ன குழந்தையாக தான் பார்த்தேன். நான் மிஸ் பன்ற குழந்தையை தான் உனக்குள்ள தேடிட்டு இருக்கேன்.

‘தாய் பாசத்தை வெளிப்படுத்திய அர்ச்சனா’ மனமுருகிய பாலா கட்டியணைத்த தருணம்!

ஆனால் நீ குழந்தையாக என்ன பாக்க வேணாம்னு சொல்லிட்ட. எனக்கு எல்லாரும் வேணும்டா’ எனக்கூறி அழுகிறார். இதனால் மனம் உருகிய பாலா, அர்ச்சனாவை கட்டி அணைப்பது போல புரோமோ முடிகிறது.