“பக்ரீத்” திருநாள் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் வாழ்த்து !

 

“பக்ரீத்” திருநாள் :  ஓபிஎஸ் – ஈபிஎஸ் வாழ்த்து !

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான பக்ரீத் (ஜூலை 21 ஆம் தேதி) நாளை கொண்டாடப்படுவதாக தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் ஆய்யூப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமிய பெருமக்கள் இறை நினைவோடும், யாக சிந்தனையோடும் பக்ரீத்துக்கு திருநாளை கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில் எங்களது உளங்கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

“பக்ரீத்” திருநாள் :  ஓபிஎஸ் – ஈபிஎஸ் வாழ்த்து !

இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைதூதர் இப்ராஹீம் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தின் உலகுக்கு உணர்த்தும் உன்னத நாள் பக்ரீத் திருநாள் ஆகும். இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் ஆகும்.

தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள் துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள் ,அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள், பெரியவர்களிடம் கருணை காட்டுங்கள் ,சிந்தனையிலும் நடத்தையிலும் தூய்மையை உடையவராக இருங்கள் என்று நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி வளம் பெருகும். விட்டுக் கொடுத்தலும், ஈகை புரிதலும் , மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும்.

அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெற வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தை தெரிவித்து இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித்தலைவர், எம்ஜிஆர் புரட்சி தலைவி அம்மா ஆகியோரின் வழியில் எங்களது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.