வரும் 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை- தலைமை ஹாஜி அறிவிப்பு

 

வரும் 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை- தலைமை ஹாஜி அறிவிப்பு

தமிழகத்தில் ஜுலை 21 ஆம் தேதி தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார்.

வரும் 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை- தலைமை ஹாஜி அறிவிப்பு

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை எப்போது என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் ஆய்யூப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், “ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இன்று துல் ஹஜ் மாத பிறை என்று ஷரியத் முறைப்படி தென்பட்டது. எனவே, நாளை துல் ஹஜ் மாத முதல் பிறாஈ என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருகிறது. ஆகையால் பக்ரீத் பண்டிகை ஜூலை 21 ஆம் தேதி(புதன்கிழமை) கொண்டாடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.