கந்த சஷ்டி விவகாரம்; கறுப்பர் கூட்டம் கார்த்திக்கிற்கு நிபந்தனை முன்ஜாமீன்!

 

கந்த சஷ்டி விவகாரம்; கறுப்பர் கூட்டம் கார்த்திக்கிற்கு நிபந்தனை முன்ஜாமீன்!

இந்துக்களின் கடவுள்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டது. இது தொடர்பாக பாஜக, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த யூ டியூப் சேனலுக்கு சீல் வைக்கப்பட்டது. அதே போல, வீடியோ வெளியிட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுரேந்திரன் மற்றும் செந்தில் வாசன் ஆகியோரை கைது செய்தனர்.

கந்த சஷ்டி விவகாரம்; கறுப்பர் கூட்டம் கார்த்திக்கிற்கு நிபந்தனை முன்ஜாமீன்!

இதனைத்தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்ட சுரேந்திரன், செந்தில்வாசன், கோபால் ஆகியோர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக் என்பவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், கார்த்திக்கிற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை வழங்கி முன்ஜாமீன் கொடுத்துள்ளனர்.