ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஆக்சிஜன், தண்ணீர் கிடைக்காமல் உயிரிழப்பு

 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை  ஆக்சிஜன், தண்ணீர் கிடைக்காமல் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் ஆலக்கனூர் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்ட இருக்கிறது. அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வரவில்லை என்பதால் அதை அப்படியே மூடாமல் விட்டுவிட்டனர். அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடு இல்லாமல் இருந்து வந்திருக்கிறது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை  ஆக்சிஜன், தண்ணீர் கிடைக்காமல் உயிரிழப்பு

அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சித்தப்பா என்பவரின் வீடு உள்ளது. சித்தப்பாவி இரண்டரை வயது மகன் சரத் ஹசிரே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது தொலைவில் இருந்த அந்த 15 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து இருக்கிறான். இதை யாரும் கவனிக்கவில்லை. குழந்தை காணவில்லை என்று ஒரு நாள் முழுவதும் ஊர் முழுவதும் தேடி இருக்கிறார்கள்.

கடைசியில் குழந்தையை யாரோ கடத்திவிட்டார்கள் என்று போலீசில் தகவல் கொடுக்க அவர்களும் தீவிரமாக தேடி வந்திருக்கிறார்கள். கடைசியில்தான் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடப்பது தெரிய வந்திருக்கிறது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை  ஆக்சிஜன், தண்ணீர் கிடைக்காமல் உயிரிழப்பு

இதையடுத்து தீயணைப்பு துறையினரும் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து 24 மணி நேரம் ஆகிவிட்டதால் தண்ணீர் உணவு இல்லாமல் குழந்தை சோர்வாக இருந்தது தெரியவந்தது. குழந்தையின் நிலை என்ன என்பது தெரியாமல் மீட்பு பணி தீவிரமாக நடந்தது . இரவில் நடந்த மீட்புப்பணியில் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

அதன்பின்னர் மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய அந்த குழந்தைக்கு தண்ணீர் ஆக்சிஜன் கிடைக்காமல் உணவும் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியினரை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. அந்த ஆள்துளை கிணற்றை அமைத்தது யார்? ஏன் மூடாமல் விட்டார்கள் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.