12ஆம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை! கர்ப்பத்துக்கு காரணமான மாணவன்…

 

12ஆம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை! கர்ப்பத்துக்கு காரணமான மாணவன்…

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 12ஆம் வகுப்புப் படிக்கும் மகளுக்கு குழந்தை பிறந்ததை மறைத்த தந்தை, கர்ப்பத்துக்குக் காரணமான பள்ளி மாணவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

12ஆம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை! கர்ப்பத்துக்கு காரணமான மாணவன்…

திருப்பத்தூரில் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த பாகம்பிரியாள் என்ற பெண்ணிடம் திடீரென பச்சிளம் குழந்தை ஒன்று இருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், சந்தேகம் கொண்டு குழந்தைகள் நல அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். விசாரணையில் அந்தக் குழந்தையை அப்பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற செவிலியர் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். செல்வியை விசாரித்தபோது, அவர் பணிபுரியும் மருத்துவமனையில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தை அது என்பது தெரியவந்தது.

12ஆம் வகுப்பு மாணவிக்கும் அவருடன் படித்த மாணவனுக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் குழந்தை பிறந்ததும் அதனை மறைத்து, குழந்தையை பாகம்பிரியாளிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, மாணவியின் தந்தையையும் 12ஆம் வகுப்பு மாணவனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், மருத்துவர் பானுமதி, பாகம்பிரியாள், செவிலியர் செல்வி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.