தாயான 14 வயது சிறுமி : 17 வயது சிறுவன் கைது!!

 

தாயான 14 வயது சிறுமி : 17 வயது சிறுவன் கைது!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் தென்றல் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுஇருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுவன் , சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி 2 மாதம் கர்ப்பம் ஆன நிலையில் இந்த விவகாரம் குடும்பத்திற்கு தெரிய வந்தது.

தாயான 14 வயது சிறுமி : 17 வயது சிறுவன் கைது!!

இதையடுத்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்படவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர் . அதில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.இருப்பினும் 14வயதான சிறுமி குழந்தை பெற்றுக் கொண்டுள்ளது குறித்து ஆவடியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது.

தாயான 14 வயது சிறுமி : 17 வயது சிறுவன் கைது!!

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் திருவள்ளூரில் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் அடைந்தனர். சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மருத்துவ சிகிச்சை முடிந்ததும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.