கிங் கோலியின் வெற்றி பயணத்திற்கு பிரேக் போட்ட பாகிஸ்தான் வீரர்!

 

கிங் கோலியின் வெற்றி பயணத்திற்கு பிரேக் போட்ட பாகிஸ்தான் வீரர்!

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் இந்திய கேப்டன் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக முதலிடத்தில் நீக்கமற நிறைந்திருந்த கோலியின் பயணத்திற்கு பாபர் அசாம் தடை போட்டிருக்கிறார். பாபர் அசாமிற்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிங் கோலியின் வெற்றி பயணத்திற்கு பிரேக் போட்ட பாகிஸ்தான் வீரர்!

நவீன கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் விராட் கோலி. அவரது தொடர்ச்சியான ஃபார்மும், ரன்களைக் குவிப்பதாலும் ரன் மெஷின் என்று பெயர் பெற்றவர். தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயருக்கும் சொந்தக்காரர் கோலி. இதனால் தான் நீண்ட நாட்களாக ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை யாருக்கும் விட்டுத்தரமால் அரியாசணத்தில் அமர்ந்திருந்தார். வல்லவனுக்கும் ஒரு வல்லவன் வருவான் என்பது போல பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் கோலியை வீழ்த்தியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அருமையாக விளையாடிய பாபர் அசாம் 13 புள்ளிகள் உயர்ந்து 865 புள்ளிகளுடன் கோலியைப் பின்னுக்குத் தள்ளினார். கோலி 1,258 நாட்கள் முதலிடத்தில் தொடர்ந்துவந்தார். இதன்மூல முதலிடத்தைப் பிடிக்கும் நான்காவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசைகளில் முறையே ஆறாம் இடத்திலும் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்.