பி.டெக் மாணவியை குத்திக் கொன்றுவிட்டு, காதலன் தற்கொலை முயற்சி

 

பி.டெக் மாணவியை குத்திக் கொன்றுவிட்டு, காதலன் தற்கொலை முயற்சி

ஆந்திராவில் ரகசியமாக செய்துகொண்ட திருமண உறவை முறித்துக்கொண்ட கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயவாடா பகுதியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வருபவர் தேஜேஸ்வினி. இவர் அதே பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வரும் சின்னசாமி என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

பி.டெக் மாணவியை குத்திக் கொன்றுவிட்டு, காதலன் தற்கொலை முயற்சி

இந்நிலையில், இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரத்தை அறிந்த பெற்றோர், தேஜஸ்வினியை வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரகசியமாக செய்துகொண்ட திருமண உறவை தேஜேஸ்வினி முறித்து கொண்டதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி இன்று மதியம் தேஜேஸ்வினி வீட்டுக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பி.டெக் மாணவியை குத்திக் கொன்றுவிட்டு, காதலன் தற்கொலை முயற்சி


அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேஜேஸ்வினியை சரமாரியாக குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துமனையில் அனுமதித்த நிலையில், தேஜஸ்வினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த சின்னசாமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விஜயவாடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டெக் மாணவியை குத்திக் கொன்றுவிட்டு, காதலன் தற்கொலை முயற்சி