“கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள்”.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

 

“கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள்”.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,864 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கொடிய வகை தொற்றான கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

“கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள்”.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், இந்துகாந்தகஷாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் உள்ளிட்ட ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரை செய்துள்ளதாகவும், இந்த மருந்துகளை அரசு சிகிச்சை மையங்களில் கட்டணமின்றி மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மேலும், காலை மற்றும் இரவு என இருவேளை சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும் என்றும் கூறினார்.