#AyodhyaHearing: மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்!
ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை விசாரித்து வந்தது
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை விசாரித்து வந்தது. அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், அயோத்தியில் உள்ள இடத்தை ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோஹி அக்காரா ஆகிய மூன்று தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மூன்று பிரிவினரும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் கடைசிக்கட்ட விசாரணை அக்டோபர் 18ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனால் நாடெங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
PM tweets, “Whatever decision SC delivers in #Ayodhya case, it’ll not be a victory or defeat of anyone. My appeal to the countrymen is that it should be the priority of all of us that this decision should further strengthen the great tradition of peace,unity&goodwill of India. pic.twitter.com/nGXKyfraO6
— ANI (@ANI) November 8, 2019
இந்நிலையில் இது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தீர்ப்பு யாருக்கும் வெற்றி தோல்வியாக இருக்காது. தீர்ப்பு வெளியானதும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.