“விமானப்படை ஆட்சேர்ப்பு பணிக்கான விழிப்புணர்வு முகாம்” – ஆட்சியர் விஜயலட்சுமி

 

“விமானப்படை ஆட்சேர்ப்பு பணிக்கான விழிப்புணர்வு முகாம்” – ஆட்சியர் விஜயலட்சுமி

திண்டுக்கல்

இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு பணிக்கான விழிப்புணர்வு முகாமில் பங்கேற்க, திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் முன்பதிவு செய்யலாம் என ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

“விமானப்படை ஆட்சேர்ப்பு பணிக்கான விழிப்புணர்வு முகாம்” – ஆட்சியர் விஜயலட்சுமி

முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் நாளையும், நாளை மறுதினமும் முன்பதிவு செய்யலாம் என்றும், இதில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் அலுவலகத்திலும், 0451- 2491498 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துளளார்.