பிரபல நடிகை பூர்ணா எனக்கு மட்டும்தான்… மிரட்டிய இளைஞர் கைது!

 

பிரபல நடிகை பூர்ணா எனக்கு மட்டும்தான்… மிரட்டிய இளைஞர் கைது!

பிரபல நடிகையான ஷாம்னா காசிம் என்ற பூர்ணாவிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லைக்கொடுத்து, 10 லட்ச ரூபாய் பணம் கேட்டும் மிரட்டிய வழக்கில் நால்வரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

கேரளாவில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ”சூப்பர் டான்சர்” நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பூர்ணா. பின்னர் மலையாள சினிமாவில் சிறு சிறு வேடங்கள் ஏற்று நடிகையான பூர்ணா, தமிழில் ”முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். பின்னர், கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர், தலைவி என்ற பெயரிலான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட, மும்மொழியில் தயாராகும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் பூர்ணா 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகை பூர்ணா எனக்கு மட்டும்தான்… மிரட்டிய இளைஞர் கைது!

நடிகை பூர்ணா கொச்சியில் தனது தாயார் ரவுலாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பூர்ணாவை, 6 பேர் கொண்ட கும்பல் மிரட்டியதாக தாயார் ரவுலா, கொச்சி மாராடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில், நடிகை பூர்ணாவை ரபீக் என்பவர் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதில் திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியதாகவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முன் நடிகை பூர்ணாவிற்காக மாப்பிள்ளை தேடுவதற்காக அறிமுகமானவர் தான் ரபீக், அந்த தொடர்பை பயன்படுத்தி அடிக்கடி மிரட்ட துவங்கியதாகவும், சில நாட்களுக்கு முன் மற்ற 5 பேருடன் கும்பலாக தங்கள் வீட்டிற்கு வந்த ரபீக் வீடு, வாகனம் ஆகியவற்றை வீடியோ எடுத்ததோடு, தனது மகளோடு நெருங்கிபடி இருக்கும் வீடியோ எடுக்க முயற்சித்ததாகவும் நடிகையின் தாயார் புகாரில் தெரிவித்துள்ளார். அதோடு தனது மகளிடம் 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் எனவும் பணம் தராவிட்டால் பூர்ணாவின் சினிமா வாழ்க்கையையே அழித்து விடுவேன் என மிரட்டியதாகவும், வெளியே சொன்னால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாகவும் நடிகையின் தாயார் போலீஸில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கொச்சி மாராடு போலீசார், திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஷ்ரப், ரமேஷ் ஆகிய நால்வரைக் கைது செய்தனர். மற்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.