“நேர்லலாம் ஆஜராக முடியாது… வேணும்னா வீடியோ கால்ல பேசலாம்” – உபி போலீஸை அலறவிடும் ட்விட்டர் எம்டி!

 

“நேர்லலாம் ஆஜராக முடியாது… வேணும்னா வீடியோ கால்ல பேசலாம்” – உபி போலீஸை அலறவிடும் ட்விட்டர் எம்டி!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் “ஜெய் ஸ்ரீராம்” என சொல்லவில்லை என்பதற்காக இஸ்லாமியர் பெரியவர் ஒருவரின் தாடியை இந்துத்துவர்கள் மழித்ததாகவும் அவரை துன்புறுத்தியதாகவும் ஒரு செய்தி பரவியது. விவகாரம் ட்விட்டரில் மிக வேகமாகப் பரவியது. ஒருசில பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், நடிகர்கள் பதிவிட்டனர். இது மதப் பிரச்சினை எனக் கூறி விமர்சித்தனர். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

“நேர்லலாம் ஆஜராக முடியாது… வேணும்னா வீடியோ கால்ல பேசலாம்” – உபி போலீஸை அலறவிடும் ட்விட்டர் எம்டி!

விசாரணையில் அந்தச் செய்தி பொய்யானது என்றும், தாயத்து விற்றதில் மோசடி செய்ததாக அவரை ஆறு பேர் சேர்ந்து தாக்கியிருக்கின்றனர். தாக்கியவர்களில் இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களும் அடக்கம். அதில் மூன்று பேரைக் கைதுசெய்துள்ளோம். இதில் மத ரீதியான பிரச்சினைக்கு இடமில்லை. ஆனால் ட்விட்டரில் இதுபோன்று தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்று போலீசார் கூறினார். போலீசார் தெளிவுப்படுத்திய பின்னரும் சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டுகளை ட்விட்டர் நிர்வாகம் நீக்கவில்லை.

“நேர்லலாம் ஆஜராக முடியாது… வேணும்னா வீடியோ கால்ல பேசலாம்” – உபி போலீஸை அலறவிடும் ட்விட்டர் எம்டி!

இதையடுத்து ட்வீட் செய்தவர்கள் மீதும் ட்விட்டர் நிறுவனம் மீது காசியாபாத் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். இச்சூழலில் டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் ட்விட்டர் இந்தியாவை நிர்வகிக்கும் மேலாண் இயக்குநரான மனிஷ் மகேஸ்வரி, ட்விட்டர் உயர் அதிகாரி ஆசிப் கான், நடிகைகள் ஸ்வாரா பாஸ்கர், அர்ஃபா கானும் ஷெர்வானி ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

“நேர்லலாம் ஆஜராக முடியாது… வேணும்னா வீடியோ கால்ல பேசலாம்” – உபி போலீஸை அலறவிடும் ட்விட்டர் எம்டி!

இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என மனிஷ் மகேஸ்வரிக்கும் காசியாபாத் போலீஸ் சம்மன் அனுப்பியது. சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை முதலில் பதிவிட்ட அந்த நபர் யார், அவரின் ட்விட்டர் கணக்கு தகவல்களை வழங்குமாறு அதில் குறிப்பிட்டிருந்தது. அதற்குப் பதிலளித்த மனிஷ், நேரில் ஆஜராக முடியாது; வேண்டுமானால் வீடியோ கால் மூலம் விசாரணைக்கு ஆஜராவதாகக் கூறியுள்ளார். அவரின் அலட்சிய பதிலால் கோபமடைந்த போலீஸ் இரண்டாம் நோட்டீஸை அனுப்பியுள்ளது. இன்னும் 7 நாட்களுக்குள் லோனி பார்டர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என எச்சரித்துள்ளது.