குடும்ப தகராறில் இளம்பெண் அடித்துக்கொலை… 8 மாத குழந்தையுடன் கணவர் ஓட்டம்…

 

குடும்ப தகராறில் இளம்பெண் அடித்துக்கொலை… 8 மாத குழந்தையுடன் கணவர் ஓட்டம்…

சென்னை

ஆவடி அருகே இரண்டாவது மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்று விட்டு, 8 மாத குழந்தையுடன் தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆவடி அடுத்த கண்ணப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன்(42). இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். மதனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சரிதா என்வரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். சரிதாவுக்கு 8 மாத பெண் குழந்தை மற்றும் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சரிதாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மதன் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு புறப்பட்ட சரிதாவை, பணிக்கு செல்ல வேண்டாம் என்று மதன் கூறியுள்ளார். அதற்கு சரிதா மறுப்பு தெரிவித்ததால் இருவர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மதன், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சரிதாவை கடுமையாக தாக்கினார்.

குடும்ப தகராறில் இளம்பெண் அடித்துக்கொலை… 8 மாத குழந்தையுடன் கணவர் ஓட்டம்…

இதில் பின் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை அடுத்து மதன் 8 மாத கைக் குழந்தையுடன், அங்கிருந்து தப்பியோடினார். அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அம்பத்தூர் உதவி ஆணையர் கனகராஜ் நேரில் சென்று சரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டார். தொடரந்து, இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி மதனை தேடி வருகின்றனர்.