ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- கூலி தொழிலாளி உயிரிழப்பு

 

ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- கூலி தொழிலாளி உயிரிழப்பு

தேனி

போடிநாயக்கனூர் அருகே ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் மூணாறை சேர்ந்தவர் கருப்பையா. தேயிலை தோட்ட தொழிலாளி. இவர் தனது மனைவி முனியம்மாள் மற்றும் மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன், இன்று தேனி மாவட்டம் போடி நாயக்கனூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். போடி அருகேயுள்ள போஜன்பூங்கா பகுதியில் சென்றபோது, கருப்பையாவின் ஆட்டோ மீது எதிரே வந்த மற்றொரு ஆட்டோவுடன் மோதி விபத்திற்கு உள்ளானது.

ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- கூலி தொழிலாளி உயிரிழப்பு

இதில், ஆட்டோ தலைகீழாக கவிந்ததில் உள்ளே இருந்த கருப்பையா பலத்த காயம் அடைந்தார். முனியம்மாள் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பினர். விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கருப்பையா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போடி போலீசார் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தேனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.