“ஃபாரின் காரில் யூரின் போகாதே”-தடுத்த செக்யுரிட்டிக்கு நேர்ந்த நிலைமையை பாருங்க

 

“ஃபாரின் காரில் யூரின் போகாதே”-தடுத்த செக்யுரிட்டிக்கு நேர்ந்த நிலைமையை பாருங்க

ஒரு வெளிநாட்டு கார் மீது ஒரு ஆட்டோ ஓட்டுநர் சிறுநீர் கழித்ததால் ,அதை தட்டிக்கேட்ட செக்யுரிட்டியை ஆட்டோ டிரைவர் தீ வைத்து கொளுத்தினார் .

மும்பையில் பிம்ப்ரி அருகே போசாரியின் எம்ஐடிசி பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது .அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தன்னுடைய வெளிநாட்டு காரை தினமும் அந்த கம்பெனி வாசலில் நிறுத்தி விட்டு போவார் .அப்போது தினமும் அந்த காருக்கருகே கதம் என்ற 31 வயதான ஆட்டோ டிரைவர் தன்னுடைய ஆட்டோவை நிறுத்திவிட்டு சவாரிக்கு காத்து கொண்டிருப்பார் .
அந்த நிறுவனத்தின் வாசலில் ஷங்கர் பகவான் வைஃபல்கர் (41) என்ற ஒரு செக்யூரிட்டி அந்த வெளிநாட்டு காருக்கு காவலுக்கு நிற்பார் .கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்த வெளிநாட்டு காருக்கருகே நின்றிருந்த அந்த ஆட்டோ டிரைவர் , திடீரென அந்த காரின் மீது சிறுநீர் கழித்தார் .அபோது அந்த காட்சியை பார்த்து திடுக்கிட்டு போன அந்த காரின் செக்யூரிட்டி ஷங்கர் பகவான் வைஃபல்கர் அவரின் அருகே ஓடி வந்து அவர் சிறுநீர் கழிக்க கூடாது என்று தடுத்தார் . அதை கேட்டு அந்த ஆட்டோ ட்ரிவிருக்கும் அந்த செக்யுரிட்டிக்கும் கடும் வாக்கு வாதம் நடந்தது .அதனால் செக்யூரிட்டி அவரை திட்டியுள்ளார் .
பின்னர் அங்கிருந்து அப்போது போன அந்த ஆட்டோ ஓட்டுநர் மாலையில் பெட்ரோல் வாங்கி வந்து, அந்த செக்யூரிட்டி மீது ஊற்றி அவரை தீ வைத்து கொளுத்தினார் .அந்த தீயில் கருகிய அந்த செக்யுரிட்டியை அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள் ,அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தார்கள் .

“ஃபாரின் காரில் யூரின் போகாதே”-தடுத்த செக்யுரிட்டிக்கு நேர்ந்த நிலைமையை பாருங்க