வந்தவாசியில் முன்விரோதம் காரணமாக, ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை!

 

வந்தவாசியில் முன்விரோதம் காரணமாக, ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை!

திருவண்ணாமலை

வந்தவாசி அருகே முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டைக்குள் தெருவை சேர்ந்தவர் நசீர்கான் (30). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சகீனா (26). நசீர்கான், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். அப்போது, சங்கத்தை சேர்ந்த மஸ்தான் என்பவருடன், தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், மஸ்தானை தாக்கியதாக நசீர்கான் உள்ளிட் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வந்தவாசியில் முன்விரோதம் காரணமாக, ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை!

இதனை அடுத்து, நசீர்கான் செய்யாறு அருகே மாங்கால் கூட்டுரோடு பகுதிக்கு இடம்பெயர்ந்து, அங்கு சிக்கன் பகோடா கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு மனைவியை அழைத்துக் கொண்டு, வந்தவாசயில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது, அங்கு மறைந்திருந்த 6 பேர் கும்பல் நசீர்கானை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

தகவல் அறிந்த வந்தவாசி டிஎஸ்பி தங்கராமன் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை நடந்த பகுதியை பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி., அரவிந்த், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதனை அடுத்து, தனிப்படை போலீசார், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.